கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.


கோத்தகிரியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் தலையிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று இரவு, கோத்தகிரி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்தது.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதன் பின்னரே வாகனங்கள் சாலையில் சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை பார்க்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...