கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டம் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.


கோத்தகிரியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் நடமாடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் தலையிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னரே போக்குவரத்து சீரானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி, கோத்தகிரி செல்லும் சாலைகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 அன்று இரவு, கோத்தகிரி செல்லும் சாலையில் வனத்துறை சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வந்தது.

இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதன் பின்னரே வாகனங்கள் சாலையில் சென்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை பார்க்கும் போது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...