கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை மூட்டுகள் வழங்கும் முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்

கோவையில் நடைபெற்ற இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு இம்முகாமை நடத்தியது.


Coimbatore: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை மூட்டுகள் வழங்கும் மாபெரும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த நாராயண் சேவா சன்ஸ்தான் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் முகாம் நடத்தி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, அளவீடுகள் எடுக்கப்பட்ட செயற்கை மூட்டுகளை பயனாளிகளுக்கு மருத்துவக் குழுவினர் உதவியுடன் பொருத்துவதற்கான முகாம் கோவையில் நடைபெற்றது. இந்த முகாமில் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர்களுக்காக தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களைப் பொருத்தி செயல்படுவதற்கான பயிற்சிகளை அளித்தனர். சுயமாக நடக்க முடியாமல் உதவியாளர்களுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் இலவசமாக செயற்கை மூட்டுக்களைப் பொருத்தி தானாக நடந்து சென்றதைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...