ஆடி 18: பேரூர் படித்துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள்

ஆடி 18ஐ முன்னிட்டு பேரூர் படித்துறையில் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, படையல் பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை பேரூர் படித்துறையில் ஆடி 18ஐ முன்னிட்டு இன்று (03.08.2024) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு விநியோக நடவடிக்கைகள் நடைபெற்றன. இம்மண்ணில் வாழ்ந்து, நம்மை விட்டுச் சென்ற முன்னோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றங்கரைகளில் படையலிட்டு வணங்கும் நாளான ஆடி 18ஐ முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பேரூர் படித்துறையில் ஒன்று கூடினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் காணப்பட்டன. இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் மற்றும் உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.



மக்கள் படையலாக விட்டுச் சென்ற சுமார் 2000 கிலோ அளவிலான ஆப்பிள், திராட்சை, கொய்யா, வாழைப்பழம், தேங்காய், இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் துணிகளை பிரித்து எடுத்து, ஏழை எளிய மக்களுக்கும், பசியால் வாடுவோருக்கும் No Food Waste அமைப்பின் உதவியுடன் விநியோகிக்கப்பட்டன.



இந்த அறப்பணியில் பேரூர் பேரூராட்சி மற்றும் அதன் ஊழியர்கள், நொய்யல் படித்துறை பாதுகாப்பு குழு, நொய்யலாறு அறக்கட்டளை ஆகியோருடன் Sri Krishna Adhithya College of Arts and Science, PSG College of Pharmacology, Hindhusdhan Arts and Science கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பான களப்பணியாற்றினர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கு உதவும் வகையில் அமைந்தது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...