கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை காலம் ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.


Coimbatore: கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) கால அவகாசம் ஆகஸ்ட் 16, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 1 முதல் ஜூலை 31, 2024 வரை நடைபெற்ற சேர்க்கை இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம். நேரில் வருகை புரிவோருக்கு நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மகளிருக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை, மேலும் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஓராண்டு பயிற்சியில் Computer Operator & Programming Assistant (COPA), Desktop Publishing Operator (DTPO), IoT Technician (Smart Health Care), Sewing Technology ஆகிய பிரிவுகளும், ஈராண்டு பயிற்சியில் Instrument Mechanic (IM), Electronics Mechanic (EM), Information Technology (IT), Technician Medical Electronics (TME) ஆகிய பிரிவுகளும், ஆறு மாத பயிற்சியில் Smart Phone Technician Cum App Tester பிரிவும் உள்ளடங்கும்.

பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதம் தலா ரூ.750/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது. மேலும், மிதிவண்டி, சீருடை தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

நவீன தொழில் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் பொருட்டு Industrial Visit, Inplant Training, Internship Training போன்றவையும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்: 98651 28182, 94900 55602, 8838158132, 94422 39112 என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...