கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி

கோவை சிவாஜி காலனியில் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவை சிவாஜி காலனி பகுதியில் கேரள மாநிலம் வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த பேரிடரில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவை சிவாஜி காலனி பகுதியில் "அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை" அமைப்பின் சார்பாக அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் புஷ்பாணந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வழக்கறிஞர் தமிழலகன், லட்சுமி, திவ்யா, ஜெபா, வர்ஷா வர்ஷினி, மோகன் ராஜா, ஜெயமணி, முத்து, ஞானமணி, குமார், தனலட்சுமி, கோவில் மேடு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...