அருந்ததியர் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வரவேற்பு

கோவையில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை பிரஸ் கிளப்பில் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களை சந்தித்து, அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார்.

நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பட்டியல் பிரிவிற்குள் மிகவும் பின்தங்கி உள்ள அருந்ததியர் மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், பட்டியல் பிரிவுக்கு உள்ளாகவே பின்தங்கியுள்ள மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.



"திமுகவிற்கும், உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடிய முற்போக்கு இயக்கங்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இயக்கங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "இந்த சட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞருக்கும் இந்த சட்டம் செல்லும் என்ற நிலைக்கு வருவதற்கு உடன் இருந்த Makkaludan Mudhalvar ஸ்டாலினுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் கூறினார்.

நாளை காலை தமிழக முதல்வரை சந்தித்து இது குறித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். அதேசமயம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...