பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 78 வயது முதியவருக்கு கோவை POCSO நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹5.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3.5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 78 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள், தனது பாட்டியுடன் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, இ.பி.நகரில் உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய ஊழியரான முருகன் (78) வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம், வீட்டின் முதல் மாடியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, முருகன் அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி, நீதிபதி ஜி.குலசேகரன் வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சமும், அபராதத் தொகையான ரூ.10,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.5.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பானது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...