தாராபுரம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் அடுத்த சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள சேடபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை சமையல் கூடம் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், வார்டு பிரதிநிதி ரமேஷ், ராமகிருஷ்ணன், இளைஞர் அணி கனகசபாபதி, விஸ்வநாதன், கோகுலகிருஷ்ணன், கார்த்திக், செல்வகுமார் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...