கோவையில் புதிய கிளையை துவக்கியது ஏபிசி கிளினிக் - பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே துவக்கி வைத்தார்.


ஆண், பெண் என இருபாலருக்கும் அழகுபடுத்திக் கொள்ளும் சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிளினிக்கின் எட்டாவது கிளையாக கோயம்புத்துாரில் துவக்கப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 



அடுத்த 15-18 மாதங்களில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 கிளினிக்குகளை துவக்க வேண்டும் என்ற விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கு துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஏபிசி கிளினிக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திருமல் ராஜ், கூறுகையில்; “சென்னையில் மற்றுமொரு கிளையோடு, கோவையில் 8வது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெங்களுரு, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட மேலும் 15 இடங்களில் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை அனைத்தும் அடுத்தடுத்த மாதங்களில் துவக்க உள்ளோம். இந்தியா முழுவதும் அழகு சிகிச்சைக்கு நல்ல தேவைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரிலும் சர்வதேச தரம் வாய்ந்த சேவையை எளிதாக கிடைக்கச் செய்வோம்.



ஏபிசி கிளினிக் துவக்கப்பட்ட 2015ம் ஆண்டிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கிளினிக்குகளில் அறிமுகம் செய்து வருகிறது. இதன் முக்கிய அம்சமே அதிநவீன அடிப்படை கட்டமைப்பு வசதியில், பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சையாளர்கள் தான். இந்தியாவில் துவக்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே வேகமான விற்பனையை பெற்றது. ஏபிசி கிளினிக் பெங்களுரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் வணிக வாய்ப்புகளை துவக்கியுள்ளது. பிற நகரங்களிலும் இந்த வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது.

அழகு பெற அறுவை சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவியும் அளிக்க வங்கி சாரா நிதி நிறுவனங்களுடனும் ஏபிசி கிளினிக் பங்குதாராக உள்ளது. பங்குதாரர்களுக்கு தொடர்ந்து அதிநவீன பயிற்சிகளை ஏபிசி கிளினிக் சர்வதேச அளவிலான அழகுதுறை டாக்டர்களைக் கொண்டு  அளித்து வருகிறது என்கிறார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...