மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களை மேற்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...