மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களை மேற்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...