நீலகிரியில் ஊட்டி-குன்னூர் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து: மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம்

நீலகிரியில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஊட்டி-குன்னூர் மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை 22 முதல் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி - குன்னூர் மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குன்னூர்-ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை ஜூலை 22 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரங்களை அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடைந்து மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி-குன்னூர் மலை ரயில் பயணம் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் ஒன்றாகும். இந்த ரயில் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...