நீலகிரியில் ஊட்டி-குன்னூர் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து: மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம்

நீலகிரியில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஊட்டி-குன்னூர் மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை 22 முதல் மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி - குன்னூர் மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குன்னூர்-ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை ஜூலை 22 முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரங்களை அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடைந்து மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி-குன்னூர் மலை ரயில் பயணம் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் ஒன்றாகும். இந்த ரயில் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை சுற்றுலா பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...