அட்டகட்டியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது

வால்பாறை வட்டம், அட்டகட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஒவ்வொறு துறை தொடர்பாக பொதுமக்கள் அரிந்திடும் வகையில் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். 



முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், கோவை வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலைத்துறை இணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர்,



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திரணாளிகள் நல அலுவலர், சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர், தனித்துணை ஆட்சியர், வால்பாறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர், வால்பாறை காவல் ஆய்வாளர், வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்றனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு சிறப்புரை ஆற்றினார். வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றி அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.



முகாமில் பழங்குடியின மக்களுக்கு சான்றுகள், மின்னணு குடும்ப அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் வால்பறை வட்டாட்சியர் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...