கோவையில் நடமாடும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

கோவை நகரின் பல பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மத்திய நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. உக்கடம், கோட்டைமேடு, பெரிய கடை வீதி, ரத்தினபுரி போன்ற பகுதிகளில் குரங்குகள் புகுந்து தொல்லை தருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 19 அன்று சிவானந்தா காலனியில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதிக்கு வந்த குரங்கு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகர் பகுதியிலும் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குரங்குகளின் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் வருவதற்கு முன்பே குரங்குகள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளின் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர வனத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...