கோவை டாடாபாத், சூலூர் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை டாடாபாத் மற்றும் சூலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 20 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் டாடாபாத் மற்றும் சூலூர் பகுதிகளில் நாளை (ஜூலை 20) மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த மின்தடை ஏற்படும் பகுதிகளில் சாய்பாபா காலனி ஒருபகுதி, அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி, நாராயணகுரு ரோடு, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு ஒருபகுதி, பாரதி பார்க் கிராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், திவான்பகதூர் ரோடு ஒருபகுதி, பூ மார்க்கெட், பட்டேல் ரோடு, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ மில்ஸ், ரங்கேகவுடர் வீதி, சுக்கர்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம்நகர், அவிநாசி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் ரோடு, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பசெட்டியார் ரோடு, 100 அடி ரோடு, சிவானந்தாகாலனி, அட்கோ காலனி மற்றும் அலமு நகர் ஆகியவை அடங்கும்.

அதேபோல, சூலூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த மின்தடை ஏற்படும் பகுதிகளில் சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், முத்துக்கவுண்டன்புதூர் மற்றும் ராவத்தூர் ஆகியவை அடங்கும்.

பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...