மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் பாதிப்பு: முதல்வரிடம் தொழிலதிபர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிலதிபர்கள் எச்சரிக்கின்றனர்.


Coimbatore: தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர்கள் கூறியுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2022ஆம் ஆண்டில் தமிழக மின்சார வாரியம் நிலைக் கட்டணத்தை 1 கிலோவாட்டுக்கு 35 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக (430 சதவீதம்) உயர்த்தியது. மேலும் பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தையும் 20 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வால் பாதிக்கப்பட்ட 420 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து மின்கட்டணத்தை குறைக்கக் கோரி 8 கட்ட இயக்கங்களை நடத்தியதாக தொழிலதிபர்கள் தெரிவித்தனர்.


தமிழக முதல்வர் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் நிலைக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் தற்போது மின்சார வாரியம் மீண்டும் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல உள்ளதாக தொழிலதிபர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தமிழ்நாட்டில் 97 சதவீத குறு, சிறு தொழில்கள் ஜாப் ஆர்டர்களாகவும், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களாகவும் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 8 சதவீதம் கூட லாபம் இல்லாமலும், நிலையான ஆர்டர்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் மின்கட்டணத்தை உயர்த்துவது தொழில்துறையினர் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.


இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், உள்ளூரிலும் வேலைவாய்ப்பு வழங்கி வரும் குறு, சிறு தொழில்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் தொழிலதிபர்கள் எச்சரித்தனர்.


எனவே, தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் குறு, சிறு தொழில்களைப் பாதுகாக்க உடனடியாக மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உயர்த்திய 430 சதவீத நிலைக்கட்டணத்தையும் திரும்பப் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...