கோவை திருவள்ளுவர் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

கோவை திருவள்ளுவர் நகரில் இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உலா வந்தன. ஒரு யானை குடியிருப்பாளர்களை தாக்க முயன்றது. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


Coimbatore: கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று இரவு திருவள்ளுவர் நகர் பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் ஊருக்குள் உலா வந்தன. இந்த சமயத்தில், ஒரு வீட்டின் முன் கேட்டில் நின்றுகொண்டிருந்த குடியிருப்பாளர்களை ஒரு யானை திடீரென தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக, அனைவரும் வேகமாக வீட்டிற்குள் ஓடி உயிர் தப்பினர்.



இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் தங்கள் கைபேசிகளில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கு முந்தைய நாள், தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஓலைக் குடிசையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...