கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31, 2024 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 31, 2024 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. FITTER, TURNER, MACHINIST, COPA, ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, TECHNICIAN MECHATRONICS, FOOD PRODUCTION, INTERIOR DESIGN AND DECORATION, EM, REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) போன்ற ஆறு மாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் இதில் அடங்கும்.

TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, மற்றும் MANUFACTURING PROCESS CONTROL AUTOMATION ஆகிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளிலும் காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறும்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதோடு, அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள், வரைபடக்கருவிகள் மற்றும் NIMI புத்தகம் ஆகியவை அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதம் ரூ.750/- வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி தொழிற்பிரிவுகளைப் பொறுத்து 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மற்றும் பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வரை என்றாலும், மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு 0422-2642041, 8825434331, 8072737402 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...