கோவையில் பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம்; பார்வையற்ற தம்பதி உயிர் தப்பினர்

கோவை உருமாண்டம்பாளையத்தில் 90 ஆண்டுகள் பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் பார்வையற்ற தம்பதி மற்றும் வயதான தம்பதி வசிக்கும் இரு வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.


Coimbatore: கோவை மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியினர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான ஸ்ரீனிவாச பாபு மற்றும் அவரது மனைவி 60 வயதான சரோஜினி ஆகிய இருவருக்கும் கண் தெரியாது. இன்று காலை முதல் பெய்த மழையின் காரணமாக, சுமார் 10 மணியளவில் அவர்களது வீட்டின் அருகே இருந்த 90 வருட பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.



மரத்தின் ஒரு கிளை ஸ்ரீனிவாச பாபு வீட்டின் சமையல் அறை மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் ஹாலில் இருந்ததால் உயிர் தப்பினர். அதே மரத்தின் மற்றொரு கிளை அருகில் வசிக்கும் 70 வயதான மாணிக்கம் மற்றும் அவரது மனைவி 62 வயதான வசந்தாமணி ஆகியோரின் வீட்டின் மீதும் விழுந்தது. அவர்களும் வீட்டின் வெளியில் இருந்ததால் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில் இரு வீடுகளின் கூரைகள் உடைந்தும், சுவர்கள் பாதிப்படைந்தும் உள்ளன. சம்பவ இடத்திற்கு 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...