உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளும் ஓடைகளும் நீர்வரத்தை அளித்து வருகின்றன.


கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இத்தடையின் காரணமாக கோவிலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...