உடுமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அமைச்சர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் மு.பே. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் கிராமப்புறங்களில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழக செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, அமைச்சர் சாமிநாதன் பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் சந்தகை இனிப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முக்கிய திட்டம் கிராமப்புற மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமப்புற மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் கல்வித் தரம் மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...