பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு கட்டுமானத்தில் தரமற்ற கலவை: பழங்குடியினர் புகார்

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில் சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக பழங்குடியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எருமப்பாறை மற்றும் கூமாட்டி ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த குடியிருப்புகளின் அஸ்திவார பணிகளில், சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற கலவை பயன்படுத்தப்படுவதாக மலைவாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யாவிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



பொதுவாக, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் மிக முக்கியமானது. சிமெண்ட் கலவை பயன்படுத்தினால் கட்டிடம் உறுதியாக இருக்கும். ஆனால், தற்போது கட்டப்படும் குடியிருப்புகளில் கற்களை அடுக்கி, அதன் மீது சிமெண்ட் கலவைக்கு பதிலாக தரமற்ற செம்மண் கலவை பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மலைப்பிரதேசங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், இங்கு கட்டப்படும் வீடுகள் குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன. இந்நிலையில், தரமற்ற கலவை பயன்படுத்தப்பட்டால் கட்டிடங்கள் வலிமை இழக்கும் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...