கோவையில் பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2016ல் நடந்த பட்டியல் இன இளைஞர் கொலை வழக்கில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



Coimbatore: கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியல் இன இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை எஸ்.சி எஸ் டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23) டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இரவு, சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன், பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் கார்த்திக், மகேந்திரன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தாமரைச்செல்வனை கொடூரமாக வெட்டி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.



இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், மொத்தம் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 14 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். அதில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கி நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜெயசிங் என்பவர் உயிரிழந்த சூழலில், விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ், பிரகாஷ், நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோர். கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, பின்னர் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...