கோவை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்தம் - நரிக்குறவர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி

கோவையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற நரிக்குறவர் பெண்ணின் தங்கை, வேறு இனத்தைச் சேர்ந்த விஜில்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், விஜில்குமார் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க விடாமல், வெளியேறுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாதா தனது குடும்பத்தினருடன் பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இன்று, தங்கள் வீட்டிற்கு சொந்தமான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சுஜாதாவும் அவரது குடும்பத்தினரும், தங்கள் வீட்டை மீட்டுத் தரக்கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...