கோவையில் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரரின் கேமரா திருட்டு: போலீஸ் விசாரணை

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் சதாசிவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் ஒருவரின் கேமரா மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புகைப்படக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார். வெள்ளலூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் சதாசிவம், நேற்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்களுடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, சதாசிவம் ஒரு கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு கேமராவை மேடையின் மீது வைத்திருந்தார். புகைப்படம் எடுத்து முடித்து திரும்பி வந்த போது, மேடையில் வைத்திருந்த கேமரா பையுடன் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒரு இளைஞர் சதாசிவத்தின் கேமராவை பையோடு எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், சார்ஜர் மற்றும் 15,000 ரூபாய் பணம் இருந்ததாக சதாசிவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...