கோவையில் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரரின் கேமரா திருட்டு: போலீஸ் விசாரணை

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் சதாசிவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் ஒருவரின் கேமரா மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புகைப்படக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார். வெள்ளலூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் சதாசிவம், நேற்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்களுடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, சதாசிவம் ஒரு கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு கேமராவை மேடையின் மீது வைத்திருந்தார். புகைப்படம் எடுத்து முடித்து திரும்பி வந்த போது, மேடையில் வைத்திருந்த கேமரா பையுடன் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒரு இளைஞர் சதாசிவத்தின் கேமராவை பையோடு எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், சார்ஜர் மற்றும் 15,000 ரூபாய் பணம் இருந்ததாக சதாசிவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...