கோவையில் மது போதையில் டாஸ்மாக் அருகே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

கோவை வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 50 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50) என்பவர் வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு மேஜையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர் சேகரை மீண்டும் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்துள்ளார். அவரைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.



நீண்ட நேரம் ஆகியும் சேகர் எழுந்து செல்லவில்லை. அப்போது அங்கு மது அருந்த வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அவரைத் திருப்பிப் பார்க்கும்போது கல்லில் பின் பக்க தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து டாஸ்மாக் பார் ஊழியர்களிடமும், சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டு சேகரைக் கீழே தள்ளிக் கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...