மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதி மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரப் அலி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சங்கர் நகர் பகுதி வார்டு கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.



கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தர் மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் நந்தகிருஷ்ணன், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் மற்றும் நகராட்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...