கோவையில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை பேரூர் செட்டிபாளையம் மகாளியம்மன் கோவில் மைதானத்தில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கும்மியாட்டம் ஆடி விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, பேரூர் செட்டிபாளையம் உள்ள மகாளியம்மன் திருக்கோவில் மைதானத்தில் கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை வளர்க்கும் விதமாக பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 135வது அரங்கேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடி விழாவை கோலாகலமாக்கினர்.



விழாவின் தொடக்கமாக, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து பக்தர்கள் மகாளியம்மன் கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கொண்டும், இளம் பெண்கள் பாவாடை சட்டை அணிந்து கொண்டும் முளைப்பாரி கையில் ஏந்தியவாறு ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



பெண்கள் ஒன்றிணைந்து ஆடிய கும்மியாட்டம் காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரங்கேற்றத்தை கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கொங்கு பகுதி மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது வள்ளி கும்மி நடன நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருவதாகவும், அதிகமானோர் இந்த நடனத்தை ரசித்து பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விழா, கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...