கோவையில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை பேரூர் செட்டிபாளையம் மகாளியம்மன் கோவில் மைதானத்தில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் 135வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாரம்பரிய உடையில் கும்மியாட்டம் ஆடி விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, பேரூர் செட்டிபாளையம் உள்ள மகாளியம்மன் திருக்கோவில் மைதானத்தில் கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை வளர்க்கும் விதமாக பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவினரின் 135வது அரங்கேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கும்மியாட்டம் ஆடி விழாவை கோலாகலமாக்கினர்.



விழாவின் தொடக்கமாக, விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து பக்தர்கள் மகாளியம்மன் கோவிலில் வைத்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கொண்டும், இளம் பெண்கள் பாவாடை சட்டை அணிந்து கொண்டும் முளைப்பாரி கையில் ஏந்தியவாறு ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடினர்.



பெண்கள் ஒன்றிணைந்து ஆடிய கும்மியாட்டம் காண்போரை கவர்ந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரங்கேற்றத்தை கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கொங்கு பகுதி மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது வள்ளி கும்மி நடன நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருவதாகவும், அதிகமானோர் இந்த நடனத்தை ரசித்து பார்த்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விழா, கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...