கோவையில் மத ஒற்றுமையைப் பறைசாற்றிய இஸ்கான் தேரோட்டம்..!

கோவையில் இஸ்கான் அமைப்பின் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த தேரோட்டம் நடத்தப்பட்டது.

தேர்முட்டியில் தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டி நோக்கிச் சென்றது. ஒப்பணக்கார வீதியில் தேர் சென்ற போது, அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்றனர். இஸ்கான் அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த செயல் பார்ப்போரை நெகிழச் செய்தது.



அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஜெகன்னாதர், சுபத்ரா தேவி, பலதேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள், "ஹரே ராம ஹரே கிருஷ்ணா" என்று பஜனை பாடிக் கொண்டும், பெண்களும் சிறுமிகளும் கும்மியாட்டம் ஆடிக் கொண்டும் சென்றனர்.



பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த தேரோட்டமானது நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தேரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த தேரோட்டம் கோவையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...