மேட்டுப்பாளையம்-காரமடை அருகே லாரி மீது மோதிய தனியார் பேருந்து: ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவை மாநகருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக வருமானத்தை பெருக்க தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம்-காரமடை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிவேகத்தில் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, அங்கு நின்றிருந்த இருவர் மீது மோதிவிட்டு, லாரி மீதும் மோதி நின்றது.

இந்த விபத்தில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...