காங்கேயம் காடையூர் காடையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பல லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள காடையீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூரில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீ கருணாகர பெருமாள் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இந்த கோவிலில் ஸ்ரீ விநாயகர் முதல் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வரை பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ பங்கசாட்சி உடனமர் ஸ்ரீ காடேஸ்வரப் பெருமான், காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ கருணாகர பெருமாள், ஸ்ரீ வெள்ளையம்மன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.



கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. புனித நீர் கலசங்களுக்கும் சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஆன்மிகவாதிகள், பக்தர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். அனைவரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பங்கசாட்சி அம்பிகை, ஸ்ரீ காடையீஸ்வரர், ஸ்ரீ வெள்ளையம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகர பெருமாளின் அருளைப் பெற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் விழா கமிட்டியின் மூலம் உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் மேற்கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...