தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதல்: இரண்டு ஆடுகள் பலி, வனத்துறை கண்காணிப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூரில் சிறுத்தை தாக்குதலில் இரண்டு ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரண்டு ஆடுகளைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் இன்று (ஜூலை 11) சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வனத்துறையினர், பாதிக்கப்பட்ட விவசாயியின் வீட்டு ஆட்டுக் கொட்டகையில் கேமராக்களைப் பொருத்தி, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...