கோவை பெரிய கடை வீதியில் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

கோவை பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 10 அன்று நடந்தது.


கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகேசன், ஜூலை 10 அன்று பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சர்தார் (வயது 33) மற்றும் தில்லை நகரை சேர்ந்த அந்தோணி ஜெகன் மனைவி மேரி (வயது 40) ஆகியோரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...