ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும்: பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோயிலின் ராஜகோபுரம் முன் பகுதியில் பாலாலய பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா தமிழக முதலமைச்சரால் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. வரும் தை மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைவாணி சாந்தலிங்கம், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...