உடுமலையில் மதுரை வீரன் கோவில் திருவிழா: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

உடுமலையில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருக்கல்யாணம், அபிஷேகம், முளைப்பாறி எடுத்தல் போன்ற நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யு எஸ் எஸ் காலனி பகுதியில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நேற்று (9-7-24) ஆனி மாதம் 25 ம் தேதி துவங்கியது.

இன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக மாரியம்மன் கோவில் சுந்தர் அர்ச்சகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சார்பில் திருமாங்கல்யம், மாலைகள், புத்தாடைகள் உள்ளிட்ட 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.



மேலும் பால், பன்னீர், புஷ்பம், மஞ்சள் உள்ளிட்ட 14 வகை அபிஷேகங்கள் மதுரை வீரன் சாமிக்கு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மதுரை வீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நிலையில் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக இன்று காலையில் முளைப்பாறி எடுக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்று தன்னாட்சி யப்பன் கோவில் பகுதியில் இருந்து கோவில் வரை வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முதல் நாளில் திருச்செந்தூர், பவானி, கூடுதுறை, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் ஊர்வலமாக சென்று மதுரைவீரன் கோவிலை அடைந்தது. மேற்கண்ட நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...