உடுமலையில் மதுரை வீரன் கோவில் திருவிழா: திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

உடுமலையில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருக்கல்யாணம், அபிஷேகம், முளைப்பாறி எடுத்தல் போன்ற நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு யு எஸ் எஸ் காலனி பகுதியில் 57 ஆண்டுகள் பழமையான மதுரை வீரன் கோவில் திருவிழா நேற்று (9-7-24) ஆனி மாதம் 25 ம் தேதி துவங்கியது.

இன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக மாரியம்மன் கோவில் சுந்தர் அர்ச்சகர் தலைமையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சார்பில் திருமாங்கல்யம், மாலைகள், புத்தாடைகள் உள்ளிட்ட 25 வகையான சீர்வரிசைகள் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.



மேலும் பால், பன்னீர், புஷ்பம், மஞ்சள் உள்ளிட்ட 14 வகை அபிஷேகங்கள் மதுரை வீரன் சாமிக்கு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மதுரை வீரன் சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்த நிலையில் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மதுரை வீரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக இன்று காலையில் முளைப்பாறி எடுக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பங்கேற்று தன்னாட்சி யப்பன் கோவில் பகுதியில் இருந்து கோவில் வரை வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முதல் நாளில் திருச்செந்தூர், பவானி, கூடுதுறை, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சியும் ஊர்வலமாக சென்று மதுரைவீரன் கோவிலை அடைந்தது. மேற்கண்ட நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...