கோவை சின்னவேடம்பட்டி ஏரி நீர்வழித்தடங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் சின்னவேடம்பட்டி ஏரியின் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்தார். 200 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி, சுமார் 25 கி.மீ சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (10.07.2023) சின்னவேடம்பட்டி ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகும். கணுவாய் பகுதியில் தொடங்கி, துடியலூர், விஸ்வநாதபுரம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வாய்க்கால்கள் வழியாக மழைநீர் இந்த ஏரியை வந்தடைகிறது.

இந்த ஏரியானது உடையாம்பாளையம், நல்லாம்பாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, செராயம்பாளையம், மயிலம்பட்டி, ஆண்டக்காபாளையம், வெள்ளானப்பட்டி, அரசூர் மற்றும் சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.



மாநகராட்சி ஆணையர் இன்று மேற்கொண்ட ஆய்வின் போது, கணுவாய் அணைக்கட்டு, கணுவாய் தடுப்பணை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி பிரிவு, சின்ன தடாகம், மாங்கரை சின்ன தடாகம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.



சின்னவேடம்பட்டி ஏரிக்கான நீர்வரத்து குறித்தும், நீர் வரத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், உதவிப் பொறியாளர் சிவக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவிப் பொறியாளர் ஜெயின்ராஜ், கௌசிகா நீர் கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா, வனத்துறை வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் மணிராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...