கோயம்புத்தூர் கற்பகம் பல்கலையில் 'துளிர்-2024' வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 'துளிர்-2024' வரவேற்பு விழா ஜூலை 3 முதல் 9 வரை நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.


கோவை: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்–2024' விழா ஜூலை 3, 4, 5 மற்றும் 8, 9 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தமது தலைமையுரையில், "நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் அயராத உழைப்பில் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொள்ள வேண்டும்" என்று சிறப்புரை வழங்கினார்.



ஐந்தாம் நாள் (09.07.2024) நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் AVP & HR லீடர், 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே. சுஜித் குமார் சிறப்புரை வழங்கினார்.



அவர், "மாணவர்கள் தங்களது குறிக்கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி" என்று அறிவுறுத்தினார்.

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கே.இராமசாமி, "மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, தாய்நாட்டின் பெருமை, மாணவர்களின் கடமை, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, வெற்றியின் மீதான மன ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...