கலைஞர் எழுதிய புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் ஆஜர்

கோவையில் கலைஞரின் "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" புத்தக விநியோக வழக்கில், திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் "முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 9) காலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்திற்கு வந்து ஆஜரானார்.

நா. கார்த்திக்குடன், பாப்பநாயக்கன்புதூர் பகுதி செயலாளர் பரணி கே.பாக்கியராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். மேலும், பல முக்கிய திமுக நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் இந்த வழக்கு விசாரணையின் போது உடனிருந்தனர்.

வழக்கறிஞர்களான அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், சலாவுதீன், சி.என். சந்திரன், குமணன், மணிவேல், ராஜமாணிக்கம், சந்திரமோகன், வெங்கடாசலம், முருகானந்தம், வினோத், பிரபாகரன், ஸ்டீபன், சின்னத்துரை, மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளான நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட பலரும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக திமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...