கலைஞர் எழுதிய புத்தக விநியோக வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் ஆஜர்

கோவையில் கலைஞரின் "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" புத்தக விநியோக வழக்கில், திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜரானார். பல திமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் "முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு தொடர்பாக, இன்று (ஜூலை 9) காலை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்திற்கு வந்து ஆஜரானார்.

நா. கார்த்திக்குடன், பாப்பநாயக்கன்புதூர் பகுதி செயலாளர் பரணி கே.பாக்கியராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். மேலும், பல முக்கிய திமுக நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் இந்த வழக்கு விசாரணையின் போது உடனிருந்தனர்.

வழக்கறிஞர்களான அகஸ்டஸ், ப.கிருஷ்ணமூர்த்தி, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புச் செழியன், மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், சரவணன், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், சலாவுதீன், சி.என். சந்திரன், குமணன், மணிவேல், ராஜமாணிக்கம், சந்திரமோகன், வெங்கடாசலம், முருகானந்தம், வினோத், பிரபாகரன், ஸ்டீபன், சின்னத்துரை, மாதவன், எலிசபெத் ராணி, கலைவாணி, மோகன்குமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கட்சியின் பிற முக்கிய நிர்வாகிகளான நெசவாளர் அணி அமைப்பாளர் வி.மணி, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட பலரும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக திமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...