கோவை ஒண்டிப்புதூரில் மனைவி, மகள்களை கொன்ற குடிகார தந்தை கைது

கோவை ஒண்டிப்புதூரில் குடிப்பழக்கத்தால் வேலையை இழந்த தந்தை, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரு மகள்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் குடும்பத் தலைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராஜ் (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்தார். இதனால் அவரது மனைவி புஷ்பா (35) உடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், ஜூலை 8 ஆம் தேதி காலை, தங்கராஜ் தனது மனைவி மற்றும் இரு மகள்களான ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகியோர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தங்கராஜ் கோபத்தில் முதலில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளியதும், அவளை காப்பாற்ற முயன்ற மனைவி புஷ்பாவையும், பின்னர் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் தள்ளி, அதன் மூடியை மூடி கொலை செய்த உண்மை வெளிப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தங்கராஜை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...