கோவை ஒண்டிப்புதூரில் மனைவி, மகள்களை கொன்ற குடிகார தந்தை கைது

கோவை ஒண்டிப்புதூரில் குடிப்பழக்கத்தால் வேலையை இழந்த தந்தை, பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி மற்றும் இரு மகள்களை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.


கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் குடும்பத் தலைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கராஜ் (40) என்ற கூலித் தொழிலாளி, கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது அருந்தி வந்தார். இதனால் அவரது மனைவி புஷ்பா (35) உடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.



இந்நிலையில், ஜூலை 8 ஆம் தேதி காலை, தங்கராஜ் தனது மனைவி மற்றும் இரு மகள்களான ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகியோர் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தங்கராஜிடம் நடத்திய விசாரணையில், அவர் முரணான தகவல்களை அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்டு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தங்கராஜ் கோபத்தில் முதலில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டியில் தள்ளியதும், அவளை காப்பாற்ற முயன்ற மனைவி புஷ்பாவையும், பின்னர் இளைய மகள் ஷிவானியையும் தொட்டியில் தள்ளி, அதன் மூடியை மூடி கொலை செய்த உண்மை வெளிப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தங்கராஜை போலீசார் கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...