கோவையில் தொலைந்த, திருடுபோன 168 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாநகர காவல் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட 168 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போதுவரை 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூலை 6 அன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், உரியவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகரில் தொலைந்த மற்றும் திருடுபோன 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கைப்பேசிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு பேசி நேரிலும், கூரியர் மூலமும் போலீஸார் கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இன்னும் 200 கைப்பேசிகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. கைப்பேசி பறிப்பு தொடர்பாக நடப்பாண்டில் தற்போதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...