கோவையில் தொலைந்த, திருடுபோன 168 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாநகர காவல் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட 168 கைப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தற்போதுவரை 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஜூலை 6 அன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், உரியவர்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகரில் தொலைந்த மற்றும் திருடுபோன 168 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கைப்பேசிகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு பேசி நேரிலும், கூரியர் மூலமும் போலீஸார் கைப்பேசிகளை மீட்டுள்ளனர். இன்னும் 200 கைப்பேசிகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. கைப்பேசி பறிப்பு தொடர்பாக நடப்பாண்டில் தற்போதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...