கோவையில் 8வது புத்தகத் திருவிழா: ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறுகிறது - ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 250 அரங்குகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் 8வது புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 250 அரங்குகளில் இலட்சக் கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து புகழ்பெற்ற பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

புத்தகத் திருவிழாவை அமைச்சர் பெருமக்கள் துவக்கி வைக்க உள்ளனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

விழாவில் தினந்தோறும் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்துகொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள், சிறப்பு நிகழ்ச்சிகள், கவி அரங்கம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, நாடகம், விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, "சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் 10 நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...