கோவை: குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை - போலீசார் விசாரணை

கோவை காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், 28 வயது பெண் தனது இரண்டரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி கிராமத்தில் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெள்ளாதி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (31) மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (28). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயது மகள் அஸ்விக்கா உள்ளார்.

ஜூலை 4 அன்று காலையில் சந்தோஷ் தோட்டத்திற்குச் சென்றபோது, கலாமணி தனது மகளுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். நீண்ட நேரம் திரும்பி வராததால் கவலையடைந்த சந்தோஷ், உறவினர்களுடன் தேடியபின் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

மதியம் 2 மணியளவில், வீட்டருகே உள்ள கிணற்றோரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்தது. சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றில் எட்டிப் பார்த்தபோது, கலாமணி மற்றும் அஸ்விக்கா ஆகியோரின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக காரமடை காவல்துறையினருக்கும், மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கலாமணி தனது மகளை மார்போடு துணியால் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

காரமடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...