ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும்: மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசின் மது கொள்கையையும் விமர்சித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பதவியேற்றுள்ளனர். ராகுல் காந்தி இன்று ஹத்ராஸ்க்கு சென்றிருக்கிறார். ஹத்ராஸ்க்கு செல்ல வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வர வழி தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு எடுக்காமல் ராகுல் காந்தி உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைப் பார்வையிட வேண்டும்."

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மிகப்பெரும் உத்வேகத்தோடு விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருக்கிறது," என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, "ஸ்டாலின் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை ஒழித்து தமிழகத்தை காக்க வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்," என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் பற்றி கேட்கப்பட்டபோது, "விமர்சனங்களுக்கு எங்கள் தலைவர் சரியான பதில் கொடுத்துள்ளார். எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக திகழ்கிறது," என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் குறித்து, "புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மற்றும் சட்டங்கள் தமிழாக்கம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மேலும், "தாராபுரம் வழியாக ஈரோட்டுக்கு ரயில் பாதை கொண்டு வருவதற்கான திட்டத்தை அடுத்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளைய ரயில் நிலையத்தை 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்தி வருகிறோம். தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், அந்தப் பகுதி மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்," என்று முருகன் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...