ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும்: மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசின் மது கொள்கையையும் விமர்சித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பதவியேற்றுள்ளனர். ராகுல் காந்தி இன்று ஹத்ராஸ்க்கு சென்றிருக்கிறார். ஹத்ராஸ்க்கு செல்ல வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வர வழி தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு எடுக்காமல் ராகுல் காந்தி உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைப் பார்வையிட வேண்டும்."

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மிகப்பெரும் உத்வேகத்தோடு விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருக்கிறது," என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, "ஸ்டாலின் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை ஒழித்து தமிழகத்தை காக்க வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்," என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் பற்றி கேட்கப்பட்டபோது, "விமர்சனங்களுக்கு எங்கள் தலைவர் சரியான பதில் கொடுத்துள்ளார். எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக திகழ்கிறது," என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் குறித்து, "புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மற்றும் சட்டங்கள் தமிழாக்கம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மேலும், "தாராபுரம் வழியாக ஈரோட்டுக்கு ரயில் பாதை கொண்டு வருவதற்கான திட்டத்தை அடுத்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளைய ரயில் நிலையத்தை 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்தி வருகிறோம். தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், அந்தப் பகுதி மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்," என்று முருகன் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...