உடுமலையில் போதையில் அரசு பேருந்தை மறித்த நபர் கைது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் போதை நிலையில் அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியிலிருந்து வாளவாடி செல்லும் 41 எண் கொண்ட அரசு பேருந்தை வழிமறித்த பொன்ராஜ், "இந்த ஊருக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை. தண்ணீர் வரும் வரை பேருந்தை விடமாட்டேன்" என்று கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்டார்.



"நான் வேட்டியை மடிச்சு கட்டமாட்டேன். கட்டினா வேற மாதிரி ஆகிடும்" என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த பொன்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், பொன்ராஜ் கைது செய்யப்பட்ட பிறகு நிம்மதி அடைந்தனர்.

தளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...