பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி நல சங்க கூட்டம் நடைபெற்றது

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி நல சங்க கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மருத்துவமனை மேம்பாட்டிற்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி நல சங்க கூட்டம் இன்று (4-7-2024) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி கேத்தரின் சரண்யா இ.அ.ப அவர்கள் தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சியின் நகர மன்ற தலைவர் திருமதி சியாமளா நவநீதகிருஷ்ணன், நோயாளி நல சங்க உறுப்பினர்கள், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



உறைவிட மருத்துவ அதிகாரி மருத்துவர் சரவணன் பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

1. நோயாளி நல சங்கத்திற்கு சேவை நிறுவனங்களிடமிருந்து வைப்புத் தொகை (கார்ப்பஸ் ஃபண்ட்) திரட்ட முடிவு செய்யப்பட்டது.

2. CSR மூலம் மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

3. மருத்துவமனையின் நுழைவாயிலில் வேகத்தடை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

4. மருத்துவமனைக்கு வெளியே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

5. மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்ற நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

6. நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மாதம் ஒரு முறை மருத்துவமனையை சுத்தம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், முக்கிய அறிவிப்புகள்:

1. தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சி.டி. ஸ்கேன் வசதி அளிக்கப்படும்.

2. அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தமிழக முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச செவித்திறன் பரிசோதனை செய்யப்படும்.

3. புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டண வார்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

4. JICA Japan மூலமாக ரூ.39 கோடி மதிப்பில் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.



இக்கூட்டத்தில் நோயாளி நல சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பொள்ளாச்சி சார் ஆட்சியர் பதிலளித்தார். மொத்தத்தில், மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...