கோவை 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு - நடிகர் ரஞ்சித் பேட்டி

கோவையில், 'கவுண்டம்பாளையம்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார். படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் நாளை வெளியாக இருந்த 'கவுண்டம்பாளையம்' திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்தை வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் கூறினார்.

"நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது," என்று ரஞ்சித் விளக்கினார். மேலும், "ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்லும் பதில்," என்றும் அவர் கூறினார்.

"செண்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்," என்று ரஞ்சித் தெரிவித்தார்.

திரையரங்கில் படத்தை திரையிட்டால் கலாட்டா செய்வோம் என்று பலர் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டுவதாக ரஞ்சித் குற்றம்சாட்டினார். "திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளர விடாமல் தடுக்கிறார்கள்," என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோவை மாநகர காவல் ஆணையரிடம் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக புகார் மனு அளித்ததாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...