திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய மூவர் கைது: 60 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் வாய்க்கால் மேடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மனோஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 60 லிட்டர் சாராய ஊரல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக 6.4 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் மனோஜுடன் சேர்ந்து அவரது நண்பர்களான செல்வராஜ் (53) மற்றும் குட்டி முருகன் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 60 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...